English සිංහල
இப்போது விசாரிக்கவும்

இலங்கையின் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனமான LOLC ஃபினான்ஸ் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புத்தாக்கமான நிகழ்-உலக நிதித் தீர்வுகளை வழங்குவதில் புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குகின்றது. LOLC குழுமத்தினால் வழுவூட்டப்பட்டு, உங்கள் கனவுகள் எவ்வாறானதாயினும் அவற்றினை நனவாக்குவதனை உறுதி செய்வதன் மூலம் தொழிற்துறையில் எம்மீதான நம்பகத்தன்மையினை உருவாக்கியுள்ளோம்.

LOLC ஃபினான்ஸ் PLC ஆனது தனக்கான தனித்துவமான அடையாளங்களுடன் திகழும் இலங்கையின் அனுமதிபெற்ற முன்னோடியான நிதி நிறுவனமாகும். LOLC குழுமத்தின் பிரதானமானதொரு அமைப்பாக, தன்னிகரற்ற தரம், முழுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மற்றும் இணையற்ற நிதிசார் தொழிற் தேர்ச்சி ஆகிய அடிப்படைகளின் மீது அபிலாசைகளுக்கும் அடைவுகளுக்கும் இடையிலான இடைவெளியினை இணைக்கும் பாலமாக நாம் தொடர்ந்தியங்குகிறோம்.

நிதிசார் தீர்வுகளுக்கான இலங்கையின் முன்னோடியான தொகுப்பாக தொடங்கி மூலோபாயமான ஒன்றிணைப்புக்கள் மற்றும் அறிவார்ந்த அணுகுமுறைகள் என்பவற்றினூடாக LOLC ஃபினான்ஸ் நிறுவனமானது அதன் சேவைகளை அடிமட்ட முயற்சியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர பிரிவினர் மற்றும் பேரளவான கூட்டு நிறுவன நிறைவேற்றுனர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் வழங்கி வலுவூட்டலில் ஒரு முன் மாதிரி அமைப்பாக தன்னை உருவாக்கியுள்ளது. இவ்வளர்ச்சியும் பல்வகைமையும் கம்பனியினை இஸ்லாமிய நிதி, வாகன மற்றும் சிறிய நடுத்தர நிதி, தொழிற்பாட்டு மூலதனம் மற்றும் வெளிநாட்டு நாணய வணிகம் போன்ற பரப்புக்களில் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் சாத்தியமான வாய்ப்புக்கள், அதிஷ்டம் மற்றும் வெற்றி என்பவற்றுடன் வழி நடத்த வாய்ப்பளித்துள்ளன.

இன்று, இலங்கையின் நிதித் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் துடிப்பான நிறுவனமாக, எமது கம்பனியானது சிறப்பான திறன்களை மிக உயிப்புடன் வெளிக்காட்டி வருகின்றது. இலங்கை நாட்டு மக்களின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கத்தினால் கவரப்பட்டு, புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை அபிவிருத்தி செய்வதிலும் அத்தோடு குறிப்பாக நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களில் புதிய சந்தைகளை உருவாக்குவதிலும் புத்தாக்கத்துடன் செயற்படுவதனை இலட்சியமாக கொண்டுள்ளோம்.எமது வணிக வளர்ச்சியானது தொடர்ச்சியாக எமது மக்களின் நிபுணத்துவம், எமது ஒன்றியங்கள் மற்றும் LOLC நிறுவனத்துடனான எமது உறவு என்பவற்றுடன் இணைந்தே அபிவிருத்தியடைந்துவரும் பகுதிகளை ஒழுங்குபடுத்துகின்றது. எனெனில், எம்மால் வழங்கப்படும் பொருட்களானவை வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எனவும் கனவுகளை நனவாக்கும் எனவும், நீண்ட கால அபிலாசைகளை பூர்த்தி செய்யும் எனவும் எமது சமூகங்களுக்கு வலுவூட்டும் எனவும் நாம் நம்புகிறோம்.